வரதட்சணை
வாழ்க்கை தோட்டத்தில்பூக்கும்
மலர்க்கு
வாடகையா!
வாழ்க்கை முழுதும்
வாசம் பரப்பும்
மலரென்ன
உனக்கு சுமையா !
இன்ப துன்பங்கள்
பண்படுத்திய
வாழ்க்கை அல்லவா
இல்லறம்!
ஈருடல் ஓர் உயிராய்
உறவாட -பிறர்
ஈந்திட வேண்டுமா
பணம்!
ஈட்டிட இயலா
செல்வமென்றா -பிறர்
ஈந்திட கேட்கிறாய்
வரதட்சணை !
இழி தொழில் செய்து
பொருள் ஈட்டும்
பெண்டிர் விலைமாது
என்றால்...
இல்லறம் காண
இவ்வளவு என
இயம்பிடும் மணமகன்
விபச்சாரன் அல்லவா !
0 comments:
Post a Comment