
ஆயிரம்தான் அலைபேசியில்
கடல் என பேசினாலும்
நச் என நாலுவரிகளில்
எழுதும் மடல்
போல் ஆகுமா?
காதல் மனைவி
கடவுள் பரிசாய்
மகள் என
எல்லோரையும் பிரிந்து
வெளிநாட்டில் வேலை
செய்யும் நான்
அன்றாட நிகழ்வுகளை
அலைபேசியில் தெரிந்துக்கொண்டாலும்
காதல் என
வந்துவிட்டால் மடல்கள்
வரைவது வழக்கம்
நண்பர்கள் யாரேனும்
விடுமுறைக்கு சென்றால்
என்னவர்களுக்கு பரிசுப்பொருட்களோடு
மடல்களையும் இணைத்து
வழங்குவது வழக்கம்
எடுத்து காட்டாக
மனைவிக்கு தங்கத்தில்
நகை ஏதேனும்
வாங்கினால் அதை
அழகான பெட்டியில்
அடைத்து அதோடு
மடலையும் வைப்பேன்
இந்த தங்கத்திற்கு
நீண்ட நாள்
ஏக்கமாம் எனக்காய்
உன்னிடம் தூது
சென்று உன்
மிளிரும் அங்கத்தில்
தொங்கிட
இந்த மடல்
என்னவளை அடைந்த
மறுகணம்,எண்ணிலடங்கா
முத்தங்களும் ஆயிரமாயிரம்
ஐய் லவ் யு-வும்
அலைபேசியில் வந்து
குவியும் என்
காதல் மிளிரும்
வருடம் கழித்து
விடுமுறைக்கு சென்றால்
என்னவளின் தலையனைக்கு
கீழே அன்பில்
நசுங்கி கசங்கி
சிரித்து கொண்டிருக்கும்
நான் கிறுக்கிய
சிறு மடல்கள்
தூரமோ,நேரமோ
உண்மை காதல்
அழிவதில்லை அது
மென்மேலும் மெருகேற
தகதகவென மின்ன
மடல்கள் வரைவோம்
அலைபேசி நம்
வைரமுத்துவின் கவிதைகள்
போன்றது எனில்
மடல்களோ ஒப்பற்ற
தெய்வப்புதல்வனின் திருக்குறள்கள்
போன்றது என்பேன்
மடல்கள் வரைவோம்
மணங்களை வெல்வோம்
யதார்த்த வாழ்க்கையே
சிறந்த கவிதைகள்
0 comments:
Post a Comment