நாம் யார்?
பிறப்பதற்கு முன் என்ன நடந்தது
தெரியாது...
இறந்த பின் என்ன நடக்கும் என்பதும்
தெரியாது...
பிறந்து இறப்பதற்குள்
எத்தனை எத்தனை உறவுகள்
எத்தனை எத்தனை மதங்கள்
எத்தனை எத்தனை சாதிகள்
எத்தனை எத்தனை இனங்கள்
எத்தனை எத்தனை மொழிகள்
மனிதனின் காலம் என்னமோ
நூறாண்டுக்கு சற்று அதிகம்தான்
மாதத்தில் பார்த்தால் ஆயிரத்தி இருநூறு _ அதற்குள்
எத்தனை இன்ப துன்பங்கள், சண்டைச் சச்சரவுகள்...
பிறந்து இறப்பதற்கு பெயர்தான்
வாழ்க்கை!
0 comments:
Post a Comment