Friday, 14 June 2013

காதலியே ...


காதலியே ... - காதல் கவிதை

உதிரும் 
இலையாக ஊசலாடுகிறேன் 
மின்னலாய் மிளிரும் 
உன் பார்வைக்காக 

உன்கூந்தலை 
மீட்டிய பூந்தென்றல் அழகாய் 
சிறைபிடித்தது சுவாசத்தை 

உன்னை 
தூரத்தில் ரசிக்கும்போதேல்லாம் 
இதயத்தில் துளி துளிகளாய் 
கவிதை பிறக்கிறது ... 

என்விழிகளின் 
ஏமாற்றங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது 
என்னுயிர் பாதையில் - உன் 
பாதங்கள் எழுதிய கவிதைகள் ... 

சொல்லாத என்காதலை 
உன்நிழல் எடுத்துச் செல்லும்போதெல்லாம் 
புதுவித உணர்வை சந்திக்கிறது 
என்இதயம் ...

0 comments:

Post a Comment