Friday, 15 March 2013

மழலை மழை


















காற்றோடு சிறு நடனம்
காணும் விழியோடு அது வருடும்
நொடி தோறும் புது ஜனனம்
அட மழையே...
உனக்கில்லை ஒரு போதும் ஒரு மரணம்

நெஞ்சுக்குள் பூ விதைக்கும்
பஞ்சாக நினைவிருக்கும்
உணர்வெல்லாம் கதகதக்கும்
உயிருக்கும் கிறுகிறுக்கும்

ஜன்னல் தொட்ட சாரல் மழை
வண்ணம் கொட்டி சொல்லும் விடை
எண்ணம் தாண்ட சொன்ன கலை
அது இடுப்பசைக்கும் மழலை மழை

0 comments:

Post a Comment