Friday, 15 March 2013

மழலை மழை


















காற்றோடு சிறு நடனம்
காணும் விழியோடு அது வருடும்
நொடி தோறும் புது ஜனனம்
அட மழையே...
உனக்கில்லை ஒரு போதும் ஒரு மரணம்

நெஞ்சுக்குள் பூ விதைக்கும்
பஞ்சாக நினைவிருக்கும்
உணர்வெல்லாம் கதகதக்கும்
உயிருக்கும் கிறுகிறுக்கும்

ஜன்னல் தொட்ட சாரல் மழை
வண்ணம் கொட்டி சொல்லும் விடை
எண்ணம் தாண்ட சொன்ன கலை
அது இடுப்பசைக்கும் மழலை மழை

மடல்
















ஆயிரம்தான் அலைபேசியில்
கடல் என பேசினாலும்
நச் என நாலுவரிகளில்
எழுதும் மடல்
போல் ஆகுமா?

காதல் மனைவி
கடவுள் பரிசாய்
மகள் என
எல்லோரையும் பிரிந்து
வெளிநாட்டில் வேலை
செய்யும் நான்

அன்றாட நிகழ்வுகளை
அலைபேசியில் தெரிந்துக்கொண்டாலும்
காதல் என
வந்துவிட்டால் மடல்கள்
வரைவது வழக்கம்

நண்பர்கள் யாரேனும்
விடுமுறைக்கு சென்றால்
என்னவர்களுக்கு பரிசுப்பொருட்களோடு
மடல்களையும் இணைத்து
வழங்குவது வழக்கம்

எடுத்து காட்டாக

மனைவிக்கு தங்கத்தில்
நகை ஏதேனும்
வாங்கினால் அதை
அழகான பெட்டியில்
அடைத்து அதோடு
மடலையும் வைப்பேன்

இந்த தங்கத்திற்கு
நீண்ட நாள்
ஏக்கமாம் எனக்காய்
உன்னிடம் தூது
சென்று உன்
மிளிரும் அங்கத்தில்
தொங்கிட

இந்த மடல்
என்னவளை அடைந்த
மறுகணம்,எண்ணிலடங்கா
முத்தங்களும் ஆயிரமாயிரம்
ஐய் லவ் யு-வும்
அலைபேசியில் வந்து
குவியும் என்
காதல் மிளிரும்

வருடம் கழித்து
விடுமுறைக்கு சென்றால்
என்னவளின் தலையனைக்கு
கீழே அன்பில்
நசுங்கி கசங்கி
சிரித்து கொண்டிருக்கும்
நான் கிறுக்கிய
சிறு மடல்கள்

தூரமோ,நேரமோ
உண்மை காதல்
அழிவதில்லை அது
மென்மேலும் மெருகேற
தகதகவென மின்ன
மடல்கள் வரைவோம்

அலைபேசி நம்
வைரமுத்துவின் கவிதைகள்
போன்றது எனில்

மடல்களோ ஒப்பற்ற
தெய்வப்புதல்வனின் திருக்குறள்கள்
போன்றது என்பேன்

மடல்கள் வரைவோம்
மணங்களை வெல்வோம்

யதார்த்த வாழ்க்கையே
சிறந்த கவிதைகள்

கண்ணீர்












தினந்தோறும் ...
நான் மட்டும் "நனைந்து
கொண்டு இருக்கிறேன் -மழையில்"
கார்த்திகை மாதமில்லை ...
காரிருள் மேகமில்லை ...
எப்படி -இவ்வாறு
நனைகின்றேன் -தினம்
நீர் துளிகளை கேட்டால்..
அவை சொன்னது -"இது மழை துளி அல்ல
உனது கண்ணீர் துளி என்று "

விடுகதையா இந்த காதல்



நெஞ்சினிலே நெருப்பு எரிகிறது -அதை
அணைக்க என் கண்கள் தேடுகிறது
பூவா தலையா விடுதலையா
இரெண்டும் இல்லாத விடுகதையா
எங்கே என்று தேடுவதா
தேடிசென்றாலும் கிடைக்கலிய
மண்ணில் இருந்து வின் வரைக்கும்
பெண்ணில் இருந்து போன்வரைகும்
இன்னும் எதையோ தேதுகின்றேனே
அந்த பெண்ணே அதை அறிவாயோ
உனக்காக நான் காத்திருபேன்
ஆனால் நீ என்னை மறந்தால்
நான் உனக்காக என்றும் என்றென்றும் எப்பொழுதும் உனக்காக நான் காத்திருப்பேன்.!!!

விரல் நுனி விஷங்கள்....




















விரல் நடுவே புரளும்
புகைச் சுருட்டால்
மூச்சுத்திணறும்
ஆக்சிஜன்..
.............................................
சில்லறைக்கான எழுத்துக்களில்
தாய்மொழியின்
சொல்சிதைவு .
.....................................................
காரியங்களுக்காக
பெறப்படும்
காந்தியை நசுக்கிய
கை மடிப்புகள் .
......................................................
விவாக பந்தங்களில்
விலைபேசப்பட்டவன்
விரல்களிட்ட முடிச்சுகள்.
.....................................................
மையில்
பொய் சுமக்கும்
குற்றப்பதிவுகள்.
.......................................
நிராகரிக்கப் படும்
கருணை மனுக்களில்
இரக்கம் தொலைத்த
ஒப்பங்கள் .
.......................................
பணத்திற்காக
சிந்தனை தொலைத்து
விரல்நுனியில்
பதித்துக்கொண்ட
ஜனநாயக கரும்புள்ளிகள்
..........................................
விரல் நுனி விஷங்கள்....

மனித நேயம் .....!


"கை கொடு
மனமே
கை கொடு ...!
உன்
மாற்றத்திற்காக அல்ல ...!
உன்னில் பிறந்த .....
உண்மையான .....
மனிதநேய
தோற்றத்திற்காக .....!

நாள்காட்டி




















இலவசமாக கிடைத்ததும் 
வாங்கி வந்தேன் ...... 
நீ மிகவும் 
புதுமையான நாவல் .... 
ஒவ்வொரு பக்கத்திலும் 
ஒரு சிறப்பு தான் ..... 
என் முதல் பார்வையும் 
உன் மேல் தான் ...... 
உன் அறிவு மொழிகளை 
தினமும் படிக்கிறேன் ...... 
கடந்து வந்த பாதையை 
நினைவுட்டுகிறாய்.......... 
என் வாழ்வில் நீங்க இடம் பெறுகிறாய் ................

மனசாட்சி .....!



















புத்தக சிறையில் புதைந்த
என் புதுமைகள் எங்கே ....?
வெற்றியை தொட்டுவிடும் முன் ....
தட்டிப் பறித்தது யார்...?
பயணங்கள் மட்டும் ....,
பயணிக்கிறது மனக்கூட்டில் ....!
நான் மட்டும் எங்கே ....?

காதலித்துப்பார் ............!


என் காதலனே ....! 
உண்மையைச் சொல்லவா ....? 
இல்லை ...., 
என்னுள் மறைத்த 
பொய்யான மெய்யை சொல்லவா .....? 

தினந்தோறும் பேசிக்கொண்டோம் ...! 
ஒரு நாள் உன் வார்த்தையை 
கேட்காவிட்டாலும் ..,ஐயோ .... என்று 
தனியறையில் 
என் தலையணை கண்ணீரோடு ..., 
கரைந்து விடுகிறேன்....! 

யோசித்து பார்த்தேன் ......, 
ஏக்கத்தில் கரைந்தது ..., 
உயிரா ....? உள்ளமா...? என்று ....! 
உயிரும் உள்ளமும் 
மாற்றி மாற்றி சண்டையிட்டன ...! 
உன் நினைவுகளோடு தான் 
வாழ்கிறோம் என்பதை மறந்து ....! 

நன் மட்டும் இங்கிருக்க ......, 
என் நினைவுகள் என்னை மறந்து ...., 
எங்கோ உனக்குள் இருக்கும் ...., 
என்னைத் தேடி சுற்றுகிறது .......! 
நானோ என்னை மறந்து 
சிரித்தேன் "பைத்தியம்" 
என்ற பட்டத்தோடு .....! 

காதல் புனிதமானது....! 
அதில் காமம் கலக்காது 
என்று கேள்விப்பட்டிருப்போம்......., 
உண்மையை சொன்னால் ....., 
அது காதலை நேசிக்காதவர்கள் மட்டும் 
சொல்லிச் செல்லும் வெட்டித்தனம் ......! 

ஏனேன்றால் ....., 
காதலே காமம் தான்....! 
இதில் அதற்கு மட்டும் 
ஏன் தனிப்பதிவேடு .....! 

என்னவனின் நினைவுகளோடு ........ 
என் உணர்வுகள் உரசி கொள்ளும் போது .... 
என் நெஞ்சம் பஞ்சாய் 
பற்றிச் செல்லும் ........, 
இதுவும் ஒரு வகை 
ஊடல் கலந்த காமம் தானே ....! 

காதலித்துப்பார் புரியும் ......!

Tuesday, 12 March 2013

“நினைவெல்லாம் நீயாக.....”





கருப்பு போர்த்திய கடல் மேலே..,
இருப்பு கொள்ளா மனதோடே..
அலுப்பு தீர பாட்டு- அதை
ஏந்தி அவளிடம் செல்லாதோ காற்று;
நீர் மேலே நில்லாத படகுபோல
நினைவெல்லாம் அவள் தள்ளாட
நிர்கதியாய் நான் கடல்மேலே....,

கண்ணாலே தூண்டில் போட்டு
காதலிலே காய போட்டு
காவலுக்கு  நில்லாமல் போனவளே.....!

உன் விழி பின்பம் கண்டு
உண்மையில் மீன் என்று
வலை போட்டதுண்டு;
அலையில் நுரையெல்லாம் பூவாய் தோன்ற
அள்ளி கொண்டை ஏற்ற
அலையோடு அலைந்ததுணடு;
உண்ணத் தொடுகையில்
விரல் நிற்க்கும் முறண்டு
அது தொப்புழ் குழியோரம்
சுகமாய் நடைபோடும் நண்டு;

என்னடி........,
என் மாமன் பெத்த வாளையே....
சொல்லடி...,
இதெல்லாம் உண்மை தானா....?!

உங்கப்பனுக்கு குழம்பு வைக்க
நீ வாங்கி போன மீனுயெல்லாம்
எடுத்து நீயும் போடயிலே....!
கருவாடா போனது ஏனடியோ.......?!.

ஏக்கத்தில் நீ பெருமூச்சேதும் விட்டாயா....!!?.


இழுத்து நானும் பிடிக்கையிலே...
இடிச்சி நழுவி போறவளே....
கக்கத்துல வச்ச கருவாட்டு கூடையா....
ஏக்கத்துல நிக்கும் எம்மனசும்
அங்க இங்க ஆசையாதடவ பாக்குதடி;

தண்ணியில விழுந்து நீ எழுந்த போது
மேலோடி கீழோடி;
முன்னாகி பின்னாகி;
கொப்பறை தேங்காய் ஈரிரண்டு
தொப்பரையாய் நனைந்து போனதடி
அப்புறம் ஆசையாய் மனமும்
காச்சலில் நனைந்து காயிதடி..;

சிப்பி உதடு சேர்த்து கோர்த்து
நத்தை நகை போட்டு
நீ நடக்கையீலே.......
கடலாத்தா கரைவந்ததா நெனச்சி
பாடி சனமெல்லாம் பணிஞ்சிவணங்குமடி...;

இத்தனை அழகா எங்கத்த
எப்படி செஞ்சா உன்ன கருவினிலே....!!
தேவதையேல்லாம் ஒன்னு கூடி
பொறந்து வந்ததோ உன் உருவினிலே.....!!.

தென்ன மரத்துல நெஞ்சி சாச்சி
என்ன மனசுல நெனச்சி விம்மி
தேங்காய் சரிய
ஏங்காய் என் உயிரே...;
தேடி வரும் வரை
கண்விழித்து தூங்காய்

இன் உயிரே.....;

கும்மியிருட்டுக்குள்ளே....
குட்டி விளக்கோடு

ஆசையாய் இருவரும்
ஆடைகளை இழந்து
வெடகம் வீசி பிடித்து
முத்தம் ஆக்கி தின்போமா....!!?

ஏறாமல் இளநீர் பரித்து
சீவாமல் நான் குடித்து
நோகாமல் நீ வளைந்து
படகோடு துடுப்போட்டி
பக்குவமாய் பயணம்
பலநாள் போவோமா......!!!?

கெலுத்தியின் கடவாய் மீசை
வாளையின் வழுக்கேன்ற கழுத்தில்
ஆமையின் அசைவாய் ஓட
சிப்பியெல்லாம் சிதரியதாக ஓசை
உதட்டுக்கு உப்பிட்டு கேட்போமா......!!

நடு ராத்திரியில்
நாலாபுர தண்ணிரில்
சுறா குதிக்கவும் நடுங்கும் குளிரில்
நினைவுகளில் நீ தான்
நெருப்புக்குவியல் பக்கமாய்
இதமூட்டுக்றாய்......;.

ஆள் இல்லா கரையில்
அலைவந்து சொன்ன கதைகேட்டு
ஆசையாய் நீ ரசிக்க;

நான் மட்டும் நடுக்கடலில்
தவிக்கிறேன்  தன்னந்தனியாக;
உன் நினைவுகள் உள்ளுக்கு சுகமாக;
என் நினைவெல்லாம் நீயாக...;.
By haseem

எப்படி கவிதை எழுதுகிறாய் ..?





தினமும் கவிதையா எழுதுறியே..
இதெல்லாம் நீயா எழுதுறியா...
இல்லை எதையும் பார்த்துஎழுதுகிறாயா ...?
யாருடைய கவிதையையும் திருடுகிறாயா ..?
காப்பி அடிக்கிறியா என்றெல்லாம் கேட்டாள் ..?
நீ சொன்ன அனைத்தும் உண்மை ...!
பார்த்து எழுதுகிறேன்
உன்னை திருடி எழுதுகிறேன்
உன்னை காப்பி அடிக்கிறேன் -உன்னை..
ஆனால் ஒன்று கேட்கவில்லை நீ ..?
எப்போது கவிதை எழுதுவாய் என்று ..?
எப்போது நிறுத்துவாய் என்று ...?
 நீ வந்தால் எழுதுவேன் ...!
 நீ வராவிட்டால் நிறுத்துவேன் ...!

Sunday, 10 March 2013

அவள் மட்டும் தான்



உன் மார்போடு நான் கண்ட நெருக்கம்....
என் மரணம் வரையிலும் இருக்கும்....!

உன் மடி மீது நான் கொண்ட உறக்கம்....
எந்த மெத்தைகளில் இனி பிறக்கும்.....?

உன் கை வழி நான் உண்ட அமுதம்...
இந்த கடைகள் எங்கனம் அளிக்கும்...?

அடித்தாலும் அணைக்கும் பாசம்...
உனையன்றி யார் தர முயலும்...?

விலையில்லா உனது நேசம்...
எவ்வுறவால் நிரப்ப இயலும்.....?

என் ஆதி முதல் அந்தம் வரை உன் அன்பின் வாசம்........
வாடாத மலராய் என் வாழ்வில் வீசும்........!

இனி ஒரு முறை இவ்வுலகில் நாம் பிறந்தால்....
உனை கைகளில் ஏந்தும் தாயாக நானாக வேண்டும்.....!

வர வேண்டாம் இங்கு


*****.......வர வேண்டாம் இங்கு ......***** 

கண்ணீர்
காவியம் - எழுதின
கண்கள்
விடுதியின்
விதியில்

வினாடிகள் கூட
நனைந்தன
விழி வரைந்த
விதியால்

புதிய மொட்டொன்று
சிலிர்த்தெழுந்த
மறு கணமே
ஈசலாகிப்போன
மாயம் - தான்
என் வாழ்வு

குடம்பியாய்
வாழ்ந்த
காலமெல்லாம்
பறக்கவென ஆசைப்பட்டேன்
கண்களை மூடிக்கொண்டு

சிறகு முளைத்து
விரித்தவுடன்
சிக்கிக் கொண்டது - விழி திறந்த போது
நிஜம் தெளிந்தது
சிறைக்குள் அடைக்கப்பட்டதாய்

அடுத்துள்ள சந்ததிக்கோர்
அன்பான வேண்டு கோள்
வர வேண்டாம் இங்கு ........................

கண்ணீர் மழையாய்

 கண்ணீர் மழையாய் 



நீர் ஆறாண்டு
கொண்டாடி
முடித்துவிட்டது
என்றெண்ணி ????
புத்தாண்டாய்
புது ஆடை பூண்டு
கொண்டாடிய போது!!
வெள்ளாண்டாய்
வேடன் கொண்டு
விளையாடி மகிழ்கிறது
தண்ணீர் மழையாய் ......

முத்தள்ளித்தந்த
தண்ணி - எம்மை
தத்தளிக்க வைத்ததை
எண்ணி - ஏதோ
மறந்தும் மறவாமலும்
மன்னித்து விட்டு விட்டோம்
அது குத்தமாய் இருந்தாலும்
எம்மை மொத்தமாய் அல்லவா
நனைத்து விட்டது கண்ணீர் மழையாய் ............

உன்னோடு ஒரு நிமிடம்


உன்னோடு ஒரு நிமிடம் 

பிரிவுகளையே - அதிகம்
புரிந்து பழகிய
என் இதயத்திற்கு
ஏனோ ?
உன் உறவுகளை
இன்னும் ஏற்க
தெரியவில்லை ....

ஒதுக்க நினைக்கிறேன்
என் வாழ்வை ஒரு புறம்
எதுக்கு அழைக்கிறாய்
மீண்டும் ஒரு சாவுக்கு மறு கணம்

ஜனனம் மரணம் இரண்டையும்
இன்பம் துன்பம் இரண்டிலும்
இரண்டற பிசைந்து உண்டு விட்டேன்
இன்று வேறேதும் என்னிடம்
மீதம் இல்லை
இத்துப்போன இவ்வுடலைத்தவிர
ஆனாலும்
ஒரு சில
உயிர் துடிப்புகள் கேட்க்கிறது
உன்னோடு ஒரு சில நிமிடம்

அவனுக்கென்ன ....????


அவனுக்கென்ன ....???? 

நினைவுகள்
எல்லாம் - என்னிடம்
நனைந்த படிதான்
வைக்கப்பட்டுள்ளது .......

இன்னும்
கோபங்களாய்
தியாகங்கலாய் - பலர்
கோபங்களால்
சாபங்களாய் - மூடித்தான்
வைக்கப்பட்டுள்ளது ...


அவை பூட்டப்பட்டது
மர்மங்களுக்குள்
அல்ல ........என்


மனதுக்குள் எத்தனை ஆயிரம்
சிந்து பாத்கள்
சிந்தித்துப் பார்த்தாலும் !!!!
கிடைக்காது
விடையோ ?
விடுதலையோ?

சோகத்தின் விளிம்பில்
தான் - நான்
என எண்ண ???
வேண்டாம் ..

நான் சோகப்பாதையில்
இன்று தான்
துவக்க விழா
கொண்டாடி உள்ளேன்.....

அதனால்
இடையிலும் இல்லை !!
முடிவிலும் இல்லை !!
மீண்டும் மீண்டும்
தப்புக்கணக்கு
போட வேண்டாம் ??

இறைவன் உங்களுக்கு
மேலான கணக்குப் பிள்ளை
எழுதி விட்டு விட்டான்
தலையில் சுமந்து
தத்தளிப்பது நான் தானே
அவனுக்கென்ன ???????

ஈசலாகிப்போன என் வாழ்வு


ஈசலாகிப்போன என் வாழ்வு 

குடம்பியாய்
இருந்த காலமெல்லாம் ???
கூண்டுக்குள் கைதி - என ....!!


வெளிச் செல்லும்
நாளை !
எதிர் பார்த்து
காத்திருந்தேன் ......?????


சிறகும்
முளைத்தது ?!
ஆனால் மறுநாள்
உயிர் பிரிந்தது !!!!?
உடல் மட்டுமே பறந்தது !!....
காற்றில்....?????.....

நீரில் என் நிஜங்கள்


நீரில் என் நிஜங்கள் 


இப்போதெல்லாம்
தண்ணீர் - எனக்கு
புதுப் புது
அர்த்தங்களை புகட்டுகிறது
ஒவ்வொரு துளியின்
ஆரம்பத்திலும் ....

அள்ளி வீசும் வானம்
வள்ளலாய் - அவை
சிலவேளை
வானவில்லாய்
அன்பென மாறும்
சில வேளை
வாழ்வெனும் வில்லில்
அம்பென மாறும்

இன்னும் இந்த நீர்
வானம் பொழியும் தண்ணீராய்
மட்டும் நின்று விடாமல்
பலர் வாழ்வை கண்ணீராய்
அல்லவா நிரப்புகிறது

ஆரம்ப மின்னல் கொஞ்சம் வாழ்வில்
ஒளியை அள்ளித் தெறித்தாலும்
பின் வீழ்ந்த துளிகள் விதையானது
மண்ணில் - ஆனால் இவை
அத்திவாரமிட்டிருப்பது இன்பத்திற்க்காகவா ?
துன்பத்திற்க்காகவா ?எனும் புதிருக்கு
விடை புரியாது குழம்பிப் போனது
மனம் எனும் குப்பைகளால் நிரப்பப் பெற்ற
குட்டைகள்

இதமான இளம் தென்றல்
எதற்காகவென ஆராயாமலேயே
அதனை சுகமாக சுவாசித்தது
ஜீவன்.....
பின்னால் அதுவே சூறாவளி
என்பது தெரியாமலேயே - தெரிந்திருந்தால்
முன்பே
மூச்சை அடக்கியிருக்குமோ ? இல்லை
மூச்சு அடங்கி இருக்குமோ
என்னவோ

சில விநாடிகளுக்கெல்லாம் - இடியென
உருமாறியது என் இன்பங்கள்
அடையாளம் தெரியாமலேயே !
புரியாத புதிராகவே இருந்தது
வேகமாக வீசிய புயலும் அதுவரை ......

சோவெனப் பொழிந்தது - தண்ணீர்
மழையாய் வானில் - கண்ணீர்
துளியாய் வாழ்வில்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட பின்
எஞ்சி இருக்கும் பிணங்களின் ஓலமாகவே
என் வாழ்க்கை என்பதை மனம் எற்றுக் கொண்டது
இந்த மழையாலே

இப்போதெல்லாம் மழை
எனக்கு
புதுப்புது அர்த்தங்களை புகட்டுகிறது
ஒவ்வொரு துளியின் ஆரம்பத்திலும்

மோதுவேன் ...!



என்னிடம் மோதி தோற்றவர்கள் ..
எல்லோரும் என்னை மோதல் காரணாகவே..
பார்க்கிறார்களே தவிர தோற்றதற்கான காரணத்தை
கண்டறியிரார்கள் இல்லை -கண்டறியும் வரை நான் மோதிக்கொண்டே இருப்பேன் -காரணம் நான் வளரவேண்டியுள்ளது .....!

இதயமாக


இதயமாக 

உன் அன்பான
நட்பை என்றும்
நான் இதயமாக
வைத்திருப்பேன்
உன்னோடு பழகிய
நாட்கள் அனைத்தும்
நன்மை ..பயக்கும்
செயலாக இருந்தது
என்றும் நட்பின்
நினைவுகளுடன்

நாம் யார்?


நாம் யார்? 

பிறப்பதற்கு முன் என்ன நடந்தது
தெரியாது...
இறந்த பின் என்ன நடக்கும் என்பதும்
தெரியாது...

பிறந்து இறப்பதற்குள்
எத்தனை எத்தனை உறவுகள்
எத்தனை எத்தனை மதங்கள்
எத்தனை எத்தனை சாதிகள்
எத்தனை எத்தனை இனங்கள்
எத்தனை எத்தனை மொழிகள்

மனிதனின் காலம் என்னமோ
நூறாண்டுக்கு சற்று அதிகம்தான்
மாதத்தில் பார்த்தால் ஆயிரத்தி இருநூறு _ அதற்குள்
எத்தனை இன்ப துன்பங்கள், சண்டைச் சச்சரவுகள்...

பிறந்து இறப்பதற்கு பெயர்தான்
வாழ்க்கை!

வரதட்சணை


வரதட்சணை 

வாழ்க்கை தோட்டத்தில்
பூக்கும்
மலர்க்கு
வாடகையா!

வாழ்க்கை முழுதும்
வாசம் பரப்பும்
மலரென்ன
உனக்கு சுமையா !

இன்ப துன்பங்கள்
பண்படுத்திய
வாழ்க்கை அல்லவா
இல்லறம்!

ஈருடல் ஓர் உயிராய்
உறவாட -பிறர்
ஈந்திட வேண்டுமா
பணம்!

ஈட்டிட இயலா
செல்வமென்றா -பிறர்
ஈந்திட கேட்கிறாய்
வரதட்சணை !

இழி தொழில் செய்து
பொருள் ஈட்டும்
பெண்டிர் விலைமாது
என்றால்...

இல்லறம் காண
இவ்வளவு என
இயம்பிடும் மணமகன்
விபச்சாரன் அல்லவா !

Anbulla Thozhi: 












நான் விலகிச் செல்லும் போதெல்லாம்
துரத்தி வந்தாய் அது யார் குற்றம்?
நான் விருப்பம் சொல்லும் நேரத்தில்
என்னை மறக்க சொல்வது பெருங்குற்றம்....!

மீண்டும் உன் மீள் வருகை காண ..



மீண்டும் உன் மீள் வருகை காண .. 

காலையின் விடியல்
என்
கதவை தட்டியதாய்
உணர்ந்தேன்
தூக்கங்களை
போர்வைக்குள் மூட்டைகட்டிவிட்டு
எழுந்து சென்று
கண்களை கசக்கி
கதவைத் திறந்தேன்
வானம் என் முன்
வடிந்த வாறு நின்றிருந்தது

இன்னும் நிலவு
இரவின் மடியில்
இனிமை கீதம் பாடி
உல்லாசமாய்
ஊர்வலம் வந்ததை
உணர்த்தியது சில்லுச்
சில்லாய் சிதறிக் கிடந்த
பனித் துளிகள்

சிதறிய நிலவுக்கு
பாய் விரித்திருந்தது
நீண்டு வளர்ந்த புற் தரைகள்
இரவுக்குள் இமை தழுவி இருந்தது
இன்னும் அந்த
நிலாக் காலங்கள்

மீண்டும் உன் மீள் வருகை
காண
நாளும் நான் பார்த்திருக்கிறேன்
நீ வருவாயென காத்திருக்கிறேன்

உன் பாதம் பட்ட மறு கணம்
என் வானமும் - இருள்
விலக்கி ஒளி துலக்கும்
என பார்த்திருக்கிறேன்
அந்த நாளுக்காய்
காத்திருக்கிறேன்

அன்றேனும்
என் தேசம் எல்லாம்
வாசம் கொள்ளும்
அன்றேனும்
என் பூக்கள் எல்லாம்
புன்னகைக்கும்

அன்றேனும்
என் இரவுகள் நிலவுடன்
விழித்திருக்கும்
அன்றேனும்
நான் எனும் நான்
நீயாய் இருப்பேன்

துடித்துக் கொண்டிருக்கின்றன
என் இமைகள்
விழித்துக் கொண்டிருக்கின்றன
என் விழிகள்
மீண்டும் உன்
மீள் வருகை காண .......

நான் இல்லை என்றாலும் என் சொல்லிருக்கும்


நான் இல்லை என்றாலும் என் சொல்லிருக்கும்

விவசாயியின் வியர்வையில் – இந்த
தேசத்தின் குருதிப் பாய்கிறது!
விவசாயி எழுந்தப் பின்தான்
சூரியனே விழிக்கிறது!!
விவசாயி உழைப்பின் இரத்தச் சொட்டுகள் தான்
வானம் மாரியாக பொழிகிறது.
யார் அறிவார் இதை....

நெஞ்சமில்லாத கள்வர்கள் பலர்
தூக்கி மிதிக்கிறார்கள் ஏழை என்று
ஏரின் கீறல்தான் ஆறு – அவர்
மண்வெட்டியால் ஓங்கி வெட்டிய குழிதான் ஏரி
யார் அறிவார் இதை....

பூமியின்
பூ பாதங்களில் பித்த வெடிப்பு
துடிதுடிக்கும் விவசாயியின் இதயம்!
யார் அறிவார் இதை....

பாழ் மனிதா!
காட்டை வெட்டி, விவசாயத்தை அழித்து
கட்டிடம் கட்டுகிறாய் உனக்கு பின்
கட்டிடமும் கல்லும்தான் மிச்சமிருக்கும் காலம்
வெகுதூரமில்லை ....!
உண்ண உணவின்றி மீண்டும் இடிப்பாய் !
கட்டிடத்தை இடித்து விவசாயம் செய்யும்
காலம் வரும் ! மனிதா காலம் வரும்!!
அன்று....
நான் இல்லை என்றாலும் என் சொல்லிருக்கும்.

ஒ மா மனிதா


ஒ மா மனிதா....! 

பூவனமும் பூத்து குலுங்க
மாவனமும் காய்த்து கணிக்க
மானினமும் மிரண்டு ஓட
கானகமும் காய்ந்து கிடக்க
இம் மனிதரினம் மட்டுமே
மற்ற இனங்களை ஏமாற்றி
மா மனிதனாக காட்சி அளிக்கிறான் ...

வகர வரிசை


வகர வரிசை .... 

வரம் தரும் இறைவனையும்
வாணிகம் செய்யும் மானிடா !
விதைத்த வினை நீ விண்ணுலகம் சென்றாலும்
வீறு நடை போட்டு வரும் ...
வரவும் செலவும் வந்து போய்
வலுவூட்டும் வாழ்க்கையடா !
வெகுளியாக நீ இருந்தால்
வேட்டையாடும் உலகமடா !
வையத்துள் வாழ்வாங்கு வாழ
ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வோர் நிலைதனிலும்
வௌவால் மாதிரி தொங்காமல்
தொண்டுள்ளம் கொண்டு
தூய்மையாக வாழவேண்டும் ....

தந்துவிடு


தந்துவிடு ......

மீண்டும் உன் நினைவில்
மீள்கிறேன் - உன்னிடமே
மீண்டவாய்

மாட்டிக் கொண்டேன் தெரிந்துதான்
அவஸ்தை - ஆனாலும்
வழி தெரியும் வெளியேற
எதையும் தொலைத்தவனாய்
திரும்ப விருப்பமில்லை - ஆகவே
திரும்பத் தந்துவிடு
என் இதயத்தை

முகம் முழுக்க முகமூடி
மாட்டிக் கொண்டே அலைகிறாய்
இன்னும் ஏனடி இதயத்தை
பூட்டிக்க் கொண்டே திரிகிறாய்

உடைத்தெரிந்துவிட்டாய் - என்
உணர்வுகளை - என்று - இன்று
ஊர்ஜிதமாகியது எனக்கு - எனவே
எஞ்சி இருக்கும் என் இதயத்தை தந்துவிடு
கைவிட நான் தயாரில்லை
திரும்பக் கேட்ப்பதால் ஒன்றும் கஞ்சனுமில்லை

விளைவு எனும் அறுவடை
நிலத்தில் நின்று கொண்டு -இல்லை இல்லை
வியப்பின் அவல நிலையில்நின்று கொண்டிருக்கிறேன்
விதைத்தவன் நானில்லை - உன்
விளைச்சலால் விற்கப்பட்டவன் .

உன்னோடு நான் இருந்த


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்... 

கையும் காலும் மரப்பது போல
மனசும் மரத்துப் போச்சா?
ஏழையை உலகம் மறப்பது போல
நீயும் மறந்தா ஆச்சா?

உனை நம்பியே வாழ்கிறேன் - நான்
உறங்காமலே வீழ்கிறேன்

நெசமா நெசமா இது நெசமா?
மனசா மாறும் ஒரு விஷமா?
முழுசா மறந்தா தப்பில்லையா?
நானும் உனக்கு ஒப்பில்லையா?


மனசது மனசது பாரமடி
உன் நினைவில் நான் வாழ்க்கையின் ஓரமடி
சுமந்தேன் நெனப்ப மனசுக்குள்ள
கனம் தாங்காமல் அழுதேன் என்ன சொல்ல

நீ கொஞ்சம் சிரித்தால் போதுமடி
அதில் சுமைதான் குறையும் நான் பேதையடி
உன் நினைவு புயலின் தாக்கத்திலே
நான் பலநாள் தொலைத்தேன் தூக்கத்தையே


நான் விலகிச் செல்லும் போதெல்லாம்
துரத்தி வந்தாய் அது யார் குற்றம்?நான் விருப்பம் சொல்லும் நேரத்தில்
என்னை மறக்க சொல்வது பெருங்குற்றம்

மறப்பதும் வெறுப்பதும் உன் விருப்பம்
ஆனால் என்னை எப்போதும் மறக்காதே
விலகிச் செல்வதும் உன் விருப்பம்
ஆனால் என்னை விட்டு விலகிச் செல்லாதே

உறவே உயிரே..


உறவே உயிரே... 

 

உறவின் அருமை 
பிரிவில் புரியும் 
உறக்கம் தொலைத்து 
உள்ளம் மருகும் 

உறவின் பிணக்கம்நினைத்தே வருந்தும் 

உனக்கும் உண்டோ இந்த 
பிரிவின் பிதற்றல்,,,,, 

உறவே உறவே 
உன்னைத் தேடும் உன் 
பிரிவே மருந்து நம் 
உறவை உணர