கருப்பு போர்த்திய கடல் மேலே..,
இருப்பு கொள்ளா மனதோடே..
அலுப்பு தீர பாட்டு- அதை
ஏந்தி அவளிடம் செல்லாதோ காற்று;
நீர் மேலே நில்லாத படகுபோல
நினைவெல்லாம் அவள் தள்ளாட
நிர்கதியாய் நான் கடல்மேலே....,
கண்ணாலே தூண்டில் போட்டு
காதலிலே காய போட்டு
காவலுக்கு நில்லாமல் போனவளே.....!
உன் விழி பின்பம் கண்டு
உண்மையில் மீன் என்று
வலை போட்டதுண்டு;
அலையில் நுரையெல்லாம் பூவாய் தோன்ற
அள்ளி கொண்டை ஏற்ற
அலையோடு அலைந்ததுணடு;
உண்ணத் தொடுகையில்
விரல் நிற்க்கும் முறண்டு
அது தொப்புழ் குழியோரம்
சுகமாய் நடைபோடும் நண்டு;
என்னடி........,
என் மாமன் பெத்த வாளையே....
சொல்லடி...,
இதெல்லாம் உண்மை தானா....?!
உங்கப்பனுக்கு குழம்பு வைக்க
நீ வாங்கி போன மீனுயெல்லாம்
எடுத்து நீயும் போடயிலே....!
கருவாடா போனது ஏனடியோ.......?!.
ஏக்கத்தில் நீ பெருமூச்சேதும் விட்டாயா....!!?.
இழுத்து நானும் பிடிக்கையிலே...
இடிச்சி நழுவி போறவளே....
கக்கத்துல வச்ச கருவாட்டு கூடையா....
ஏக்கத்துல நிக்கும் எம்மனசும்
அங்க இங்க ஆசையாதடவ பாக்குதடி;
தண்ணியில விழுந்து நீ எழுந்த போது
மேலோடி கீழோடி;
முன்னாகி பின்னாகி;
கொப்பறை தேங்காய் ஈரிரண்டு
தொப்பரையாய் நனைந்து போனதடி
அப்புறம் ஆசையாய் மனமும்
காச்சலில் நனைந்து காயிதடி..;
சிப்பி உதடு சேர்த்து கோர்த்து
நத்தை நகை போட்டு
நீ நடக்கையீலே.......
கடலாத்தா கரைவந்ததா நெனச்சி
பாடி சனமெல்லாம் பணிஞ்சிவணங்குமடி...;
இத்தனை அழகா எங்கத்த
எப்படி செஞ்சா உன்ன கருவினிலே....!!
தேவதையேல்லாம் ஒன்னு கூடி
பொறந்து வந்ததோ உன் உருவினிலே.....!!.
தென்ன மரத்துல நெஞ்சி சாச்சி
என்ன மனசுல நெனச்சி விம்மி
தேங்காய் சரிய
ஏங்காய் என் உயிரே...;
தேடி வரும் வரை
கண்விழித்து தூங்காய்
இன் உயிரே.....;
கும்மியிருட்டுக்குள்ளே....
குட்டி விளக்கோடு
ஆசையாய் இருவரும்
ஆடைகளை இழந்து
வெடகம் வீசி பிடித்து
முத்தம் ஆக்கி தின்போமா....!!?
ஏறாமல் இளநீர் பரித்து
சீவாமல் நான் குடித்து
நோகாமல் நீ வளைந்து
படகோடு துடுப்போட்டி
பக்குவமாய் பயணம்
பலநாள் போவோமா......!!!?
கெலுத்தியின் கடவாய் மீசை
வாளையின் வழுக்கேன்ற கழுத்தில்
ஆமையின் அசைவாய் ஓட
சிப்பியெல்லாம் சிதரியதாக ஓசை
உதட்டுக்கு உப்பிட்டு கேட்போமா......!!
நடு ராத்திரியில்
நாலாபுர தண்ணிரில்
சுறா குதிக்கவும் நடுங்கும் குளிரில்
நினைவுகளில் நீ தான்
நெருப்புக்குவியல் பக்கமாய்
இதமூட்டுக்றாய்......;.
ஆள் இல்லா கரையில்
அலைவந்து சொன்ன கதைகேட்டு
ஆசையாய் நீ ரசிக்க;
நான் மட்டும் நடுக்கடலில்
தவிக்கிறேன் தன்னந்தனியாக;
உன் நினைவுகள் உள்ளுக்கு சுகமாக;
என் நினைவெல்லாம் நீயாக...;.
By haseem