Featured Posts Coolbthemes

Saturday, 24 August 2013

என்றும் மாறாதது


அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
நறுமணமும் நாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும் உதவாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம் தணிக்கலாம்
பகற்கனவும் பலித்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
தருமமும் தவறி போகலாம்
சத்தியமும் சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர் விடலாம்
கூறிய வாளும் குத்தாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
என் உணர்வுகளும் உறைந்து போகலாம்
உடலும் மெலிந்து போகலாம்
நாடி நரம்பும் தளர்ந்து போகலாம்
உயிரும் உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே.
by,RAFA/haseem

காதல்

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!


 by,Rafa/kinniya

Wednesday, 14 August 2013

உண்மைக்காதல் காமத்துக்கு ஏங்காது ....!!!


நீண்ட நாளுக்கு பின் ... 
அவர்கள் இருவரும் .... 
சந்திக்கின்றனர் .....!!! 

தனிமையான இடம் .... 
இடையூறுகளும் .... 
எதுவுமில்லை .... 
நீண்டநாள் எதிர்பார்த்த ... 
சந்தர்ப்பம் -அவளும் ... 
ஆவலுடன் -இவனும் ... 
ஆவலுடன் காத்திருந்தனர்....!!! 

மாலைசூரியன் மறைகிறான் 
பறவைகளும் தம் இருப்பிடத்துக்கு 
செல்கின்றன 
பறவைகள் கூட ஜோடியாக 
தான் செல்கின்றன அந்த 
காட்சியை அவள் ஓரக்கண்ணால் 
பார்க்கிறாள் ...!!! 

இதமான நேரம் 
சுகமான பொழுது ...!!! 
அவன் நெருங்க 
அவள் விலக அழகான 
ஒரு ஊடல் ...!!! 

உண்மைக்காதல் காமத்துக்கு 
ஏங்காது ....!!! 
உன்னதமான ஒரு முத்தத்திற்கு 
ஏங்கியது .....!!!

அழகு என்பது.....




















கொட்டுகின்ற மலையதனை பார்த்தல் அழகு 
குழந்தைகளின் சிரிப்பொலியை கேட்டல் அழகு 
வட்டஒளி நிலவுதன்னை ரசித்தல் அழகு 
வானவில்லின் ஏழுவகை நிறங்கள் அழகு 
கட்டழகு காதலியின் புன்னகை அழகு 
கனிஇதழின் உதட்டோர மச்சம் அழகு 
மொட்டவிழ்ந்து மலராகும் தருணம் அழகு 
முகிலேகும் மலைச்சிகரம் பார்த்தல் அழகு!! 

கட்டவிழ்ந்த் காட்டாற்று வெள்ளம் அழகு 
கரையைத் தொட முயலுகின்ற அலைகள் அழகு 
வெட்டவெளி வானந்தன்னை காணல் அழகு 


விளைந்தநெல் தலைசாயும் அழகே அழகு 
நட்டநடு இரவுதன்னின் இருளும் அழகு 
நண்பகலின் சூரியனின் வெப்பம் அழகு 
மெட்டுடனே ஒன்றாகும் பாடல் அழகு 
மின்மினிப் பூசிகளின் மென்மை அழகு!! 

தொட்டபொருள் பனியாகும் குளிரும் அழகு 
தொன்மைமிகு திருக்குறளின் வளமை அழகு 
நெட்டைநெடு மரங்களுள்ள வனங்கள் அழகு 
நெளிந்தோடும் ஆற்றுமணல் படுகை அழகு 
வீட்டுச்சுவர் மேலுலவும் பல்லி அழகு 
விடியற்காலை இருள்சேர்ந்த வெளிச்சம் அழகு 
காட்டியவை அத்தனையும் காட்சிப் படுத்தி 
கவிதையொன்று உருவானால் அதுவே அழகு!! 

...............ராணுவன்...............

Mohnish Bahl & his wife with Indian Army (231925) size:1280x1024
உன்னைத் தெரியாதவன் ! 
உனக்காக உயிர்கொண்டவன் ! 
தன்மை மறந்தாலும், 
தன்னை இலக்காதவன் ! 
எல்லாம் நமக்காக, 
என்பவர் மத்தியிலே ! 
அன்னைத் திருநாடே, 
சொத்தென்று மாறியவன் ! 
எல்லைக் கடுங்குளிரில், 
தடயங்கள் தேடுபவன் ! 
தன்னை நினைக்காமல், 
மண்ணுக்காய் வாழுபவன் ! 
இன்னல் வந்ததென்றால், 
முன்னாலே ஓடுபவன் ! 
அங்கம் சிதைந்தாலும், 
அடுத்த அடி ஊனுபவன் ! 
அண்டை பயங்கரத்தார், 
அருகினிலே வாழுபவன் ! 
துப்பாக்கி தோட்டாக்கள், 
துணையுடனே ஆளுபவன் ! 
உடலைக் கருவியென, 
உழைப்பிற்குள் போடுபவன் ! 
உடனே வரும் அழைப்பு, 
என்றே கண் மூடுபவன் ! 
இவனின் துணையின்றி, 
அண்டங்கள் நிலைக்காது ! 
இவனின் தயவின்றி, 
எவ்வுயிரும் பிழைக்காது ! 
மனிதக் காவலனை, 
மதியென்றும் மறக்காது ! 
இவனே பெருங்கடவுள், 
எனும் உண்மை மரிக்காது !!

எப்படி எல்லாம் என்னை வளர்த்தாய் அம்மா...!!



எப்படி எல்லாம் 
என்னை வளர்த்தாய் அம்மா...!! 

முதல் கவிதை 
நான் எழுதி 
முதன் முதலாய் 
உனக்கு காண்பிக்க 
முத்தாக இருக்கு என்றாய்... 

மூக்குசளி ஒழுகும் 
உன் மகள் எனக்கு 
முந்தாணியில் நீ 
துடைத்துவிட்ட.... 
உன் முந்தாணி வாசம் 
என் கை குட்டையில் 
இல்லை அம்மா... 

மிட்டாய் வாங்க 
ரூபாய் கேட்டால் 
என்னை அலைகழித்து 
மசாலா பெட்டி திறந்து 
நீ கொடுத்த 
ஒற்றை நாணயத்தின் 
வாசமே தனி...அம்மா 

மறுநாள் நாணயம் 
இடம் மாறி 
"டீ" பொடி பெட்டியில் 
இடம் பிடித்தது..... 
அது வேறு செய்தி... 

என் பள்ளியில் 
மாறு வேடப்போட்டி 
நடக்க 
பாரதியின் வேடம் போட 
அப்பாவின் வேட்டி கட்டி.. 
அண்ணாவின் கருப்பு 
கோட்டை போட்டு விட்டாய்.. 
முழுமையடையாத 
குட்டி பாரதியை.. 
உன் கண் "மை" கொண்டு 
மீசை வரைந்தல்லவா 
முழுமையாக்கினாய் நீ...!!! 

களைப்பில் கல்லூரி முடித்து 
நான் வர 
பசிக்குதம்மா என்று 
நான் சொல்ல... 
பசி தாங்க மாட்டாள் 
பிள்ளை என்று 
பதறிப்போய் 
மொறு மொறுன்னு 
நீ சுட்ட தோசை 
ஐயோ ..அம்மா...!!!. 

நோய் நொடி வந்தபோதும் 
நொடிப் பொழுதும் 
நீ உறங்கவில்லை அம்மா..! 

அம்மை போட்டு 
நான் கிடக்க 
பத்தியம் இருந்த 
பத்தினி தாயே...! 

உன் மடியில் 
என் தலை சாய்த்து 
மஞ்சள் கரை படிந்த 
உன் கைகளால் 
தலை வருடிய 
உன் விரல்களை 
நான் தேடுறேன் அம்மா...! 

ஆத்திகம் நீ பேச 
நாத்திகம் நான் பேச.. 
குட்டி குட்டி 
பட்டி மன்றங்கள்.. 
தீர்ப்பு வழங்கும் 
நடுவரும் 
நீதானே அம்மா... !! 

கணவன் வீடு நான் செல்ல... 
குடும்ப கண்கள் 
அத்தனையும் 
கலங்கி நிற்க... 
" கலங்காதிரு மகளே "என்று 
கலங்காத கண்களோடு 
என்னை வழி அனுப்பி... 
திரும்பி நின்று 
உன் கண்ணீர் துடைத்த 
உன் முந்தாணி 
எனக்கு செய்தி சொன்னதம்மா...!! 
உன் தலையணை 
இன்னமும் எனக்கு 
சொல்கிறதம்மா...!!"

Friday, 14 June 2013

அம்மா


அம்மா - சிறுகதை
அன்று ஒருநாள் 

என் தோழி நளினி 

வீட்டுக்கு தோழமியுடன் 

போயிருந்த போது 

அவள் வீட்டில் இல்லை 

அலுவலுகம் போய் இருபதாக 

நடுத்தர வயது வேலைகாரி சொன்னாள் 

"கொஞ்ச நேரம் இருங்க அம்மா வந்துடுவாங்க" 

அங்கு காத்திருந்த கொஞ்ச நேரத்தில் 

நளினி குழந்தை யிடம் பேச முடிந்தது 

உன் பெயர் என்ன ? 

நான் கேட்க 

"கௌரி" என்று பதில் சொன்னது குழைந்தை 

"என்ன படிக்கிற ?" 

"எல் .கே. ஜி" 

எந்த பள்ளிகூடம் ? 

......குழந்தைக்கு புரியவில்லை தமிழ் 

உடனே நான் 

"எந்த ஸ்கூல்ல படிக்கிற ?". 

"ஆர். எஸ் .மெற்றிகுலெசன் ஸ்கூல்" 

"உங்க அம்மா பேரு என்ன ?" 

"அருக்காணி "பட்னு பதில் வர 

"என்ன உங்க அம்மா பேரு அருகாணியா?" 

அதற்குள் அங்கு தோழி நளினி வர 

"உங்க பெயர குழந்தை அருகாணின்னு சொல்லுது...?"என்று நான் கேட்க 

"குமார் அவ என்னை சொல்லல வீட்டு வேலைகாரி பெயர் சொல்றா ?" என்று தோழி சொல்ல 

"என்ன இது ?" நான் முழிக்க 

"ஆமா குமார் நான் மோர்னிங் 7 ஒ கிலோக் 
வழிகி போய் நைட் 8 ஒ கிலோக் வேலை முச்சிட்டு 
விரதால அவ என்னை அம்மான்னு கூபிடாம நளினி இன்னுதான் கூபிடுவா " என்றால் சலிப்புடன் 

அப்போது 

குழைந்தை "அம்மா டிபன் ரெடியா ? " என கேட்டவாறு சமையல் அறை பக்கம் ஓடியது... 

நிஜ அம்மாவை சட்டை செய்யாமல் 


எனக்கு கொஞ்சம் தலை கிறுகிறுத்தது

காதலியே ...


காதலியே ... - காதல் கவிதை

உதிரும் 
இலையாக ஊசலாடுகிறேன் 
மின்னலாய் மிளிரும் 
உன் பார்வைக்காக 

உன்கூந்தலை 
மீட்டிய பூந்தென்றல் அழகாய் 
சிறைபிடித்தது சுவாசத்தை 

உன்னை 
தூரத்தில் ரசிக்கும்போதேல்லாம் 
இதயத்தில் துளி துளிகளாய் 
கவிதை பிறக்கிறது ... 

என்விழிகளின் 
ஏமாற்றங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது 
என்னுயிர் பாதையில் - உன் 
பாதங்கள் எழுதிய கவிதைகள் ... 

சொல்லாத என்காதலை 
உன்நிழல் எடுத்துச் செல்லும்போதெல்லாம் 
புதுவித உணர்வை சந்திக்கிறது 
என்இதயம் ...

என்னை விட்டு விடுங்கள்




ஒரு பிச்சைக்காரனின் 
அழுக்குப் பாத்திரத்தில் 
சில்லறையை வீசி விட்டுப் போகும் 
சீமாட்டியைப் போலத்தான் 
என்னிடம் அவ்வப் போது 
பெருந்தன்மையும் 
சிறு கருணையும் காட்டினீர்கள் 

சமூகத்தின் மேலடுக்கு 
கீழடுக்கு பற்றிப் பேசிக் கொண்டே 
என் கால்களுக்கு 
கீழே பள்ளம் தோண்டினீர்கள் 
உங்கள் அறிவாளிச் சமூகத்தால் 
நான் தீண்டப் படாதவனாகவே 
இருந்து விட்டுப்போகிறேன் 
அது பற்றிய கவலை எனக்கில்லை இனி 

உங்கள் மூளையின் 
மூட்டு தேயுமட்டும் 
திண்ணையில் உட்கார்ந்து 
இந்த சமூகத்துக்கு 
சிந்தியுங்கள் 
சிந்தித்து சிந்தித்து 
நிந்தனை செய்யுங்கள் 

உழைத்துக் களைத்த 
உடல் வலி தீர 
எங்கள் மாலை நேரத்து 
மது மயக்கத்தின் 
சலம்பல்களுக்கு 
சற்றும் சளைத்ததல்ல 
உங்கள் இலக்கியப் புலம்பல்களும் 
போர்களும் அக்கப் போர்களும் 

நீங்கள் 
பாரதியாய் முண்டாசு கட்டிக் கொள்ள 
பாவி என் கோவணத்தை உருவாதீர்கள் 
உங்கள் சிரசின் மேல் 
மகுடம் ஜொலிக்கட்டும் 
என்னை விட்டு விடுங்கள் 

உங்கள் மூளையை நம்பி நான் இல்லை 
யாரை நம்பியும் நான் இல்லை 
உங்கள் அளவிற்கு எனக்கு 
சிந்தனை வளராவிட்டாலும் 
என் கைகளில் வலுவிருக்கிறது 
யாரை நம்பியும் நான் இல்லை 
ரேகைகள் தேய்ந்த 
என் கைகளைத் தவிர 

என் வாழ்வைப் படம் போட்டும் 
பாடலாக்கியும் 
இருந்த என் ஒட்டுத் துணியையும் 
அவிழ்த்துப் போட்ட 
நீங்கள் படைப்பாளியாய் 
இருந்து விட்டுப் போங்கள் 
உழைப்பாளியாய் இருப்பதில் 
இழிவொன்றுமில்லை எனக்கு..!

பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே !

 பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி ! - வாழ்க்கை கவிதை
கவிஞர் இரா .இரவி ! 

பெண் பிறந்தால் 
பேதலிக்கும் மனிதர்களே! 
ம்ருமகள் கிடைக்காமல் 
மண்டியிடும் நாள் வரும் ! 
ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ? 
பெண்ணிற்கு முன்னுரிமை 
பேருந்தில் தந்தோம் ! 
திரையரங்கில் தந்தோம் ! 
இல்லத்தில் தந்தோமா ? 
இதயத்தில் தந்தோமா ? 
இல்லதரசிக்குத் தந்தோமா ? 
உணவு உண்பது உடை உடுப்பது 
உறக்கம் கொள்வது 
இருபாலருக்கும் பொது ! 
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ? 
ஆணிற்கு வேண்டாமா ? 
பெண்ணுரிமை பற்றிப் 
பேசிவிட்டு வந்து 
எதிர்த்துப் பேசிய 
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .! 
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில் 
தந்தால் போதாது ! 
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில் 
வீட்டில் தர வேண்டும் !