
உன்னைத் தெரியாதவன் !
உனக்காக உயிர்கொண்டவன் !
தன்மை மறந்தாலும்,
தன்னை இலக்காதவன் !
எல்லாம் நமக்காக,
என்பவர் மத்தியிலே !
அன்னைத் திருநாடே,
சொத்தென்று மாறியவன் !
எல்லைக் கடுங்குளிரில்,
தடயங்கள் தேடுபவன் !
தன்னை நினைக்காமல்,
மண்ணுக்காய் வாழுபவன் !
இன்னல் வந்ததென்றால்,
முன்னாலே ஓடுபவன் !
அங்கம் சிதைந்தாலும்,
அடுத்த அடி ஊனுபவன் !
அண்டை பயங்கரத்தார்,
அருகினிலே வாழுபவன் !
துப்பாக்கி தோட்டாக்கள்,
துணையுடனே ஆளுபவன் !
உடலைக் கருவியென,
உழைப்பிற்குள் போடுபவன் !
உடனே வரும் அழைப்பு,
என்றே கண் மூடுபவன் !
இவனின் துணையின்றி,
அண்டங்கள் நிலைக்காது !
இவனின் தயவின்றி,
எவ்வுயிரும் பிழைக்காது !
மனிதக் காவலனை,
மதியென்றும் மறக்காது !
இவனே பெருங்கடவுள்,
எனும் உண்மை மரிக்காது !!
0 comments:
Post a Comment