Wednesday, 14 August 2013

...............ராணுவன்...............

Mohnish Bahl & his wife with Indian Army (231925) size:1280x1024
உன்னைத் தெரியாதவன் ! 
உனக்காக உயிர்கொண்டவன் ! 
தன்மை மறந்தாலும், 
தன்னை இலக்காதவன் ! 
எல்லாம் நமக்காக, 
என்பவர் மத்தியிலே ! 
அன்னைத் திருநாடே, 
சொத்தென்று மாறியவன் ! 
எல்லைக் கடுங்குளிரில், 
தடயங்கள் தேடுபவன் ! 
தன்னை நினைக்காமல், 
மண்ணுக்காய் வாழுபவன் ! 
இன்னல் வந்ததென்றால், 
முன்னாலே ஓடுபவன் ! 
அங்கம் சிதைந்தாலும், 
அடுத்த அடி ஊனுபவன் ! 
அண்டை பயங்கரத்தார், 
அருகினிலே வாழுபவன் ! 
துப்பாக்கி தோட்டாக்கள், 
துணையுடனே ஆளுபவன் ! 
உடலைக் கருவியென, 
உழைப்பிற்குள் போடுபவன் ! 
உடனே வரும் அழைப்பு, 
என்றே கண் மூடுபவன் ! 
இவனின் துணையின்றி, 
அண்டங்கள் நிலைக்காது ! 
இவனின் தயவின்றி, 
எவ்வுயிரும் பிழைக்காது ! 
மனிதக் காவலனை, 
மதியென்றும் மறக்காது ! 
இவனே பெருங்கடவுள், 
எனும் உண்மை மரிக்காது !!

0 comments:

Post a Comment