Friday, 14 June 2013

பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே !

 பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி ! - வாழ்க்கை கவிதை
கவிஞர் இரா .இரவி ! 

பெண் பிறந்தால் 
பேதலிக்கும் மனிதர்களே! 
ம்ருமகள் கிடைக்காமல் 
மண்டியிடும் நாள் வரும் ! 
ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ? 
பெண்ணிற்கு முன்னுரிமை 
பேருந்தில் தந்தோம் ! 
திரையரங்கில் தந்தோம் ! 
இல்லத்தில் தந்தோமா ? 
இதயத்தில் தந்தோமா ? 
இல்லதரசிக்குத் தந்தோமா ? 
உணவு உண்பது உடை உடுப்பது 
உறக்கம் கொள்வது 
இருபாலருக்கும் பொது ! 
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ? 
ஆணிற்கு வேண்டாமா ? 
பெண்ணுரிமை பற்றிப் 
பேசிவிட்டு வந்து 
எதிர்த்துப் பேசிய 
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .! 
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில் 
தந்தால் போதாது ! 
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில் 
வீட்டில் தர வேண்டும் !

1 comments:

Unknown said...

அருமையான தொகுப்பு நண்பா

பெண்களை சிலர் தான் இழுவாக பேசுவார்கள் சிலர் அன்னை போல் பாவிப்பார்கள்
அதில் நானும் ஒருவன்

by manoranjan ulundurpet 7502671997

Post a Comment