
உதிரும்
இலையாக ஊசலாடுகிறேன்
மின்னலாய் மிளிரும்
உன் பார்வைக்காக
உன்கூந்தலை
மீட்டிய பூந்தென்றல் அழகாய்
சிறைபிடித்தது சுவாசத்தை
உன்னை
தூரத்தில் ரசிக்கும்போதேல்லாம்
இதயத்தில் துளி துளிகளாய்
கவிதை பிறக்கிறது ...
என்விழிகளின்
ஏமாற்றங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது
என்னுயிர் பாதையில் - உன்
பாதங்கள் எழுதிய கவிதைகள் ...
சொல்லாத என்காதலை
உன்நிழல் எடுத்துச் செல்லும்போதெல்லாம்
புதுவித உணர்வை சந்திக்கிறது
என்இதயம் ...
0 comments:
Post a Comment