Friday, 14 June 2013

அம்மா


அம்மா - சிறுகதை
அன்று ஒருநாள் 

என் தோழி நளினி 

வீட்டுக்கு தோழமியுடன் 

போயிருந்த போது 

அவள் வீட்டில் இல்லை 

அலுவலுகம் போய் இருபதாக 

நடுத்தர வயது வேலைகாரி சொன்னாள் 

"கொஞ்ச நேரம் இருங்க அம்மா வந்துடுவாங்க" 

அங்கு காத்திருந்த கொஞ்ச நேரத்தில் 

நளினி குழந்தை யிடம் பேச முடிந்தது 

உன் பெயர் என்ன ? 

நான் கேட்க 

"கௌரி" என்று பதில் சொன்னது குழைந்தை 

"என்ன படிக்கிற ?" 

"எல் .கே. ஜி" 

எந்த பள்ளிகூடம் ? 

......குழந்தைக்கு புரியவில்லை தமிழ் 

உடனே நான் 

"எந்த ஸ்கூல்ல படிக்கிற ?". 

"ஆர். எஸ் .மெற்றிகுலெசன் ஸ்கூல்" 

"உங்க அம்மா பேரு என்ன ?" 

"அருக்காணி "பட்னு பதில் வர 

"என்ன உங்க அம்மா பேரு அருகாணியா?" 

அதற்குள் அங்கு தோழி நளினி வர 

"உங்க பெயர குழந்தை அருகாணின்னு சொல்லுது...?"என்று நான் கேட்க 

"குமார் அவ என்னை சொல்லல வீட்டு வேலைகாரி பெயர் சொல்றா ?" என்று தோழி சொல்ல 

"என்ன இது ?" நான் முழிக்க 

"ஆமா குமார் நான் மோர்னிங் 7 ஒ கிலோக் 
வழிகி போய் நைட் 8 ஒ கிலோக் வேலை முச்சிட்டு 
விரதால அவ என்னை அம்மான்னு கூபிடாம நளினி இன்னுதான் கூபிடுவா " என்றால் சலிப்புடன் 

அப்போது 

குழைந்தை "அம்மா டிபன் ரெடியா ? " என கேட்டவாறு சமையல் அறை பக்கம் ஓடியது... 

நிஜ அம்மாவை சட்டை செய்யாமல் 


எனக்கு கொஞ்சம் தலை கிறுகிறுத்தது

காதலியே ...


காதலியே ... - காதல் கவிதை

உதிரும் 
இலையாக ஊசலாடுகிறேன் 
மின்னலாய் மிளிரும் 
உன் பார்வைக்காக 

உன்கூந்தலை 
மீட்டிய பூந்தென்றல் அழகாய் 
சிறைபிடித்தது சுவாசத்தை 

உன்னை 
தூரத்தில் ரசிக்கும்போதேல்லாம் 
இதயத்தில் துளி துளிகளாய் 
கவிதை பிறக்கிறது ... 

என்விழிகளின் 
ஏமாற்றங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது 
என்னுயிர் பாதையில் - உன் 
பாதங்கள் எழுதிய கவிதைகள் ... 

சொல்லாத என்காதலை 
உன்நிழல் எடுத்துச் செல்லும்போதெல்லாம் 
புதுவித உணர்வை சந்திக்கிறது 
என்இதயம் ...

என்னை விட்டு விடுங்கள்




ஒரு பிச்சைக்காரனின் 
அழுக்குப் பாத்திரத்தில் 
சில்லறையை வீசி விட்டுப் போகும் 
சீமாட்டியைப் போலத்தான் 
என்னிடம் அவ்வப் போது 
பெருந்தன்மையும் 
சிறு கருணையும் காட்டினீர்கள் 

சமூகத்தின் மேலடுக்கு 
கீழடுக்கு பற்றிப் பேசிக் கொண்டே 
என் கால்களுக்கு 
கீழே பள்ளம் தோண்டினீர்கள் 
உங்கள் அறிவாளிச் சமூகத்தால் 
நான் தீண்டப் படாதவனாகவே 
இருந்து விட்டுப்போகிறேன் 
அது பற்றிய கவலை எனக்கில்லை இனி 

உங்கள் மூளையின் 
மூட்டு தேயுமட்டும் 
திண்ணையில் உட்கார்ந்து 
இந்த சமூகத்துக்கு 
சிந்தியுங்கள் 
சிந்தித்து சிந்தித்து 
நிந்தனை செய்யுங்கள் 

உழைத்துக் களைத்த 
உடல் வலி தீர 
எங்கள் மாலை நேரத்து 
மது மயக்கத்தின் 
சலம்பல்களுக்கு 
சற்றும் சளைத்ததல்ல 
உங்கள் இலக்கியப் புலம்பல்களும் 
போர்களும் அக்கப் போர்களும் 

நீங்கள் 
பாரதியாய் முண்டாசு கட்டிக் கொள்ள 
பாவி என் கோவணத்தை உருவாதீர்கள் 
உங்கள் சிரசின் மேல் 
மகுடம் ஜொலிக்கட்டும் 
என்னை விட்டு விடுங்கள் 

உங்கள் மூளையை நம்பி நான் இல்லை 
யாரை நம்பியும் நான் இல்லை 
உங்கள் அளவிற்கு எனக்கு 
சிந்தனை வளராவிட்டாலும் 
என் கைகளில் வலுவிருக்கிறது 
யாரை நம்பியும் நான் இல்லை 
ரேகைகள் தேய்ந்த 
என் கைகளைத் தவிர 

என் வாழ்வைப் படம் போட்டும் 
பாடலாக்கியும் 
இருந்த என் ஒட்டுத் துணியையும் 
அவிழ்த்துப் போட்ட 
நீங்கள் படைப்பாளியாய் 
இருந்து விட்டுப் போங்கள் 
உழைப்பாளியாய் இருப்பதில் 
இழிவொன்றுமில்லை எனக்கு..!

பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே !

 பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி ! - வாழ்க்கை கவிதை
கவிஞர் இரா .இரவி ! 

பெண் பிறந்தால் 
பேதலிக்கும் மனிதர்களே! 
ம்ருமகள் கிடைக்காமல் 
மண்டியிடும் நாள் வரும் ! 
ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி ! 
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ? 
பெண்ணிற்கு முன்னுரிமை 
பேருந்தில் தந்தோம் ! 
திரையரங்கில் தந்தோம் ! 
இல்லத்தில் தந்தோமா ? 
இதயத்தில் தந்தோமா ? 
இல்லதரசிக்குத் தந்தோமா ? 
உணவு உண்பது உடை உடுப்பது 
உறக்கம் கொள்வது 
இருபாலருக்கும் பொது ! 
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ? 
ஆணிற்கு வேண்டாமா ? 
பெண்ணுரிமை பற்றிப் 
பேசிவிட்டு வந்து 
எதிர்த்துப் பேசிய 
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .! 
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில் 
தந்தால் போதாது ! 
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில் 
வீட்டில் தர வேண்டும் !

Monday, 10 June 2013

ஒரு குழந்தையின் கதறல்


குப்பை தொட்டியில் இருந்து 
ஒரு குழந்தையின் கதறல் 

என்னை வேண்டாம் 
என்று நினைத்தவர்கள் 

ஆணுறையை உபயோகித்திருந்தால் 
அன்று ஆணுறை மட்டுமே 
குப்பையில் வீச பட்டிருக்கும் 

ஆனால் இன்று 
நானோ குப்பையில் 
பரிதவிக்கிறேனே