Saturday, 24 August 2013

என்றும் மாறாதது


அன்பே உறவுகள் மாறி போகலாம்
உரிமைகள் விட்டு பறிபோகலாம்
கவலைகள் கூடி போகலாம்
உள்ளமும் வாடி போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
சுழல்காற்றும் திசைமாறி போகலாம்
அலைகடலும் கறைமீறி போகலாம்
சந்திரனும் சுடர்விட்டு எரியலாம்
சூரியனும் சூடு தணிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
நறுமணமும் நாறி போகலாம்
இணைந்த மணமும் இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும் உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும் உதவாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
மாற்றமும் மாறி போகலாம்
காதலும் கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம் தணிக்கலாம்
பகற்கனவும் பலித்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
தருமமும் தவறி போகலாம்
சத்தியமும் சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர் விடலாம்
கூறிய வாளும் குத்தாமல் போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே
என் உணர்வுகளும் உறைந்து போகலாம்
உடலும் மெலிந்து போகலாம்
நாடி நரம்பும் தளர்ந்து போகலாம்
உயிரும் உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும் மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட அன்பு மட்டுமே.
by,RAFA/haseem

காதல்

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!


 by,Rafa/kinniya

Wednesday, 14 August 2013

உண்மைக்காதல் காமத்துக்கு ஏங்காது ....!!!


நீண்ட நாளுக்கு பின் ... 
அவர்கள் இருவரும் .... 
சந்திக்கின்றனர் .....!!! 

தனிமையான இடம் .... 
இடையூறுகளும் .... 
எதுவுமில்லை .... 
நீண்டநாள் எதிர்பார்த்த ... 
சந்தர்ப்பம் -அவளும் ... 
ஆவலுடன் -இவனும் ... 
ஆவலுடன் காத்திருந்தனர்....!!! 

மாலைசூரியன் மறைகிறான் 
பறவைகளும் தம் இருப்பிடத்துக்கு 
செல்கின்றன 
பறவைகள் கூட ஜோடியாக 
தான் செல்கின்றன அந்த 
காட்சியை அவள் ஓரக்கண்ணால் 
பார்க்கிறாள் ...!!! 

இதமான நேரம் 
சுகமான பொழுது ...!!! 
அவன் நெருங்க 
அவள் விலக அழகான 
ஒரு ஊடல் ...!!! 

உண்மைக்காதல் காமத்துக்கு 
ஏங்காது ....!!! 
உன்னதமான ஒரு முத்தத்திற்கு 
ஏங்கியது .....!!!

அழகு என்பது.....




















கொட்டுகின்ற மலையதனை பார்த்தல் அழகு 
குழந்தைகளின் சிரிப்பொலியை கேட்டல் அழகு 
வட்டஒளி நிலவுதன்னை ரசித்தல் அழகு 
வானவில்லின் ஏழுவகை நிறங்கள் அழகு 
கட்டழகு காதலியின் புன்னகை அழகு 
கனிஇதழின் உதட்டோர மச்சம் அழகு 
மொட்டவிழ்ந்து மலராகும் தருணம் அழகு 
முகிலேகும் மலைச்சிகரம் பார்த்தல் அழகு!! 

கட்டவிழ்ந்த் காட்டாற்று வெள்ளம் அழகு 
கரையைத் தொட முயலுகின்ற அலைகள் அழகு 
வெட்டவெளி வானந்தன்னை காணல் அழகு 


விளைந்தநெல் தலைசாயும் அழகே அழகு 
நட்டநடு இரவுதன்னின் இருளும் அழகு 
நண்பகலின் சூரியனின் வெப்பம் அழகு 
மெட்டுடனே ஒன்றாகும் பாடல் அழகு 
மின்மினிப் பூசிகளின் மென்மை அழகு!! 

தொட்டபொருள் பனியாகும் குளிரும் அழகு 
தொன்மைமிகு திருக்குறளின் வளமை அழகு 
நெட்டைநெடு மரங்களுள்ள வனங்கள் அழகு 
நெளிந்தோடும் ஆற்றுமணல் படுகை அழகு 
வீட்டுச்சுவர் மேலுலவும் பல்லி அழகு 
விடியற்காலை இருள்சேர்ந்த வெளிச்சம் அழகு 
காட்டியவை அத்தனையும் காட்சிப் படுத்தி 
கவிதையொன்று உருவானால் அதுவே அழகு!! 

...............ராணுவன்...............

Mohnish Bahl & his wife with Indian Army (231925) size:1280x1024
உன்னைத் தெரியாதவன் ! 
உனக்காக உயிர்கொண்டவன் ! 
தன்மை மறந்தாலும், 
தன்னை இலக்காதவன் ! 
எல்லாம் நமக்காக, 
என்பவர் மத்தியிலே ! 
அன்னைத் திருநாடே, 
சொத்தென்று மாறியவன் ! 
எல்லைக் கடுங்குளிரில், 
தடயங்கள் தேடுபவன் ! 
தன்னை நினைக்காமல், 
மண்ணுக்காய் வாழுபவன் ! 
இன்னல் வந்ததென்றால், 
முன்னாலே ஓடுபவன் ! 
அங்கம் சிதைந்தாலும், 
அடுத்த அடி ஊனுபவன் ! 
அண்டை பயங்கரத்தார், 
அருகினிலே வாழுபவன் ! 
துப்பாக்கி தோட்டாக்கள், 
துணையுடனே ஆளுபவன் ! 
உடலைக் கருவியென, 
உழைப்பிற்குள் போடுபவன் ! 
உடனே வரும் அழைப்பு, 
என்றே கண் மூடுபவன் ! 
இவனின் துணையின்றி, 
அண்டங்கள் நிலைக்காது ! 
இவனின் தயவின்றி, 
எவ்வுயிரும் பிழைக்காது ! 
மனிதக் காவலனை, 
மதியென்றும் மறக்காது ! 
இவனே பெருங்கடவுள், 
எனும் உண்மை மரிக்காது !!

எப்படி எல்லாம் என்னை வளர்த்தாய் அம்மா...!!



எப்படி எல்லாம் 
என்னை வளர்த்தாய் அம்மா...!! 

முதல் கவிதை 
நான் எழுதி 
முதன் முதலாய் 
உனக்கு காண்பிக்க 
முத்தாக இருக்கு என்றாய்... 

மூக்குசளி ஒழுகும் 
உன் மகள் எனக்கு 
முந்தாணியில் நீ 
துடைத்துவிட்ட.... 
உன் முந்தாணி வாசம் 
என் கை குட்டையில் 
இல்லை அம்மா... 

மிட்டாய் வாங்க 
ரூபாய் கேட்டால் 
என்னை அலைகழித்து 
மசாலா பெட்டி திறந்து 
நீ கொடுத்த 
ஒற்றை நாணயத்தின் 
வாசமே தனி...அம்மா 

மறுநாள் நாணயம் 
இடம் மாறி 
"டீ" பொடி பெட்டியில் 
இடம் பிடித்தது..... 
அது வேறு செய்தி... 

என் பள்ளியில் 
மாறு வேடப்போட்டி 
நடக்க 
பாரதியின் வேடம் போட 
அப்பாவின் வேட்டி கட்டி.. 
அண்ணாவின் கருப்பு 
கோட்டை போட்டு விட்டாய்.. 
முழுமையடையாத 
குட்டி பாரதியை.. 
உன் கண் "மை" கொண்டு 
மீசை வரைந்தல்லவா 
முழுமையாக்கினாய் நீ...!!! 

களைப்பில் கல்லூரி முடித்து 
நான் வர 
பசிக்குதம்மா என்று 
நான் சொல்ல... 
பசி தாங்க மாட்டாள் 
பிள்ளை என்று 
பதறிப்போய் 
மொறு மொறுன்னு 
நீ சுட்ட தோசை 
ஐயோ ..அம்மா...!!!. 

நோய் நொடி வந்தபோதும் 
நொடிப் பொழுதும் 
நீ உறங்கவில்லை அம்மா..! 

அம்மை போட்டு 
நான் கிடக்க 
பத்தியம் இருந்த 
பத்தினி தாயே...! 

உன் மடியில் 
என் தலை சாய்த்து 
மஞ்சள் கரை படிந்த 
உன் கைகளால் 
தலை வருடிய 
உன் விரல்களை 
நான் தேடுறேன் அம்மா...! 

ஆத்திகம் நீ பேச 
நாத்திகம் நான் பேச.. 
குட்டி குட்டி 
பட்டி மன்றங்கள்.. 
தீர்ப்பு வழங்கும் 
நடுவரும் 
நீதானே அம்மா... !! 

கணவன் வீடு நான் செல்ல... 
குடும்ப கண்கள் 
அத்தனையும் 
கலங்கி நிற்க... 
" கலங்காதிரு மகளே "என்று 
கலங்காத கண்களோடு 
என்னை வழி அனுப்பி... 
திரும்பி நின்று 
உன் கண்ணீர் துடைத்த 
உன் முந்தாணி 
எனக்கு செய்தி சொன்னதம்மா...!! 
உன் தலையணை 
இன்னமும் எனக்கு 
சொல்கிறதம்மா...!!"